கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி

கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி
Updated on
1 min read

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
கறுப்பு எள் - கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு - கால் கிண்ணம்
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி பின் காற்றில் நன்றாக உலர்த்தவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து மிளகாய் வற்றல் தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ( அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்).  பிறகு, வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி தயார். சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்து நிறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com