ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 1. சிவபுராணம்-1

திருப்பெருந்துறையில் அருளியது. 95 அடிகளைக் கொண்ட ஒரே பாடல். கலி வெண்பா என்ற வகையில் அமைந்தது.

News image
Updated On :14 ஜூலை 2015, 9:09 am

என். சொக்கன்


பகுதி 1. சிவபுராணம்

திருப்பெருந்துறையில் அருளியது. 95 அடிகளைக் கொண்ட ஒரே பாடல். கலி வெண்பா என்ற வகையில் அமைந்தது.

இந்தப் பாடலிலிருந்து ஏழு பகுதிகளை இந்த வாரம் காண்போம்!

1

பாடலின்பம்

நமச்சிவாய வாஅழ்க, நாதன் தாள் வாழ்க,

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,

கோகழி ஆண்ட குரு மணி தன் தாள் வாழ்க,

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க,

ஏகன், அநேகன் இறைவன் அடி வாழ்க!

பொருளின்பம்

நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க,

எங்கள் நாதனாகிய இறைவனின் திருவடிகள் வாழ்க,

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது வாழ்பவனின் திருவடிகள் வாழ்க,

திருக்கோகழி என்ற திருத்தலத்தை ஆளுகின்ற சிறந்த குருவாகிய மாணிக்கத்தின் திருவடிகள் வாழ்க,

ஆகமங்களாக நின்று இனிப்பவனின் திருவடிகள் வாழ்க,

ஒரே நேரத்தில் ஒருவனாகவும் பலராகவும் நிற்கின்ற சிவபெருமானின் திருவடிகள் வாழ்க!

சொல்லின்பம்

* மணி: மாணிக்கம்

* அண்ணித்தல்: இனித்தல்

* ஏகன்: ஒருவன்

* அநேகன்: பலரானவன்

* தாள்: கால்/ திருவடிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.