ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 16 – திருப்பொன்னூசல் -5

பிரம்மன், திருமால் இருவரும் சிவபெருமானைக் காண இயலாமல் திகைத்தார்கள், அவன் ஆணா,

News image
Updated On :29 அக்டோபர் 2015, 10:51 am

என்.சொக்கன்

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

109

பாடலின்பம்

ஆணோ அலியோ அரிவையோ என்றுஇருவர்

காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

நாணாமே உய்ய ஆட்கொண்டுஅருளி நஞ்சுதனை

ஊணாக உண்டுஅருளும் உத்தரகோசமங்கைக்

கோண்ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்

பூண்ஆர் வனமுலையீர், பொன்னூசல் ஆடாமோ.

பொருளின்பம்

ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பகங்களைக் கொண்ட பெண்களே,

பிரம்மன், திருமால் இருவரும் சிவபெருமானைக் காண இயலாமல் திகைத்தார்கள், அவன் ஆணா, பெண்ணா, அலியா என்பதை உணர இயலாமல் அனைவரும் வியக்கிறார்கள், ஜோதி வடிவமாக, இவை எல்லாமுமாக அவன் திகழும் பண்பைப் போற்றுகிறார்கள்,

அன்று பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது, அதைக் கண்டு தேவர்களின் கூட்டம் நடுங்காதபடி நஞ்சை எடுத்து உண்டவன், அவர்களை ஆட்கொண்டவன் சிவபெருமான், உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் அப்பெருமான் வளைந்த பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய கூத்தன், அவனுடைய குணங்களைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.

சொல்லின்பம்

அரிவை: பெண்

குழாம்: குழு

நாணாமே: பயப்படாமல்

உய்ய: பிழைக்க

ஊண்: உணவு

கோண்: வளைந்த

சென்னி: தலை

பரவி: பாராட்டி

பூண்: ஆபரணங்கள்

வன: அழகிய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.