சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 52

தனக்கு முந்தைய பல புலவர்களை, குறிப்பாக முருகன் புகழ் பாடிய புலவர்களைத் தம் பாடல்களில் விவரமாக அமைத்துப் பாடியுள்ளார் குருநாதர்.

Updated On :29 அக்டோபர் 2015, 11:31 am

தனக்கு முந்தைய பல புலவர்களை, குறிப்பாக முருகன் புகழ் பாடிய புலவர்களைத் தம் பாடல்களில் விவரமாக அமைத்துப் பாடியுள்ளார் குருநாதர். இந்தப் புலவர்களின் வரிசையில்தான் ‘கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்’ என்று சொல்லி, கடைசியில் ‘முட்டை’யையே பாடிவிட்ட பொய்யாமொழிப் புலவரைத் தன் பாடலில் குறித்திருப்பதை இதற்கு முன்னால் உற்பாதப்பூ பாடலை விளக்கும்போது பார்த்தோம். இப்படி இன்னும் இரண்டு பாடல்களில் பொய்யாமொழிப் புலவரைப் பாடியிருக்கிறார். நம் குருநாதருடைய மனத்துக்குகந்த இன்னொரு புலவர், திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரர். திருவகுப்பில் ஒன்றாகிய வேல் வகுப்பில்,

பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

என்று நக்கீரரைக் குறித்த ஒரு புராணச் செய்தியைச் சொல்வார். அவர் சிறைப்பட்டிருந்த மலைக்குகையை இடித்து வழியை உண்டுபண்ணியது ‘படைநடத்து குகன் வேலே’ என்று முடிப்பார். வேல் விருத்தத்தின் இன்றைய எட்டாம் பாடலிலும் நக்கீரர் இடம் பெறுகிறார். வடமொழியும் தமிழும் கலந்த நடையில் இன்றைய பாடலில் சிவபெருமான் இடம்பெறுகிறார். விநாயகரும் கைகோக்கிறார். பாடலைப் பாருங்கள், கேளுங்கள்:

வேல்விருத்தம் எட்டாம் பாடல்

மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்


வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்


தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா


உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்


சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்


துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்


சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா


தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.

</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/230613143&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.