சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 62

இறைவன் போர்க்கோலம் கொண்டவன் என்பதனாலே இவன் தொடர்பான எல்லாமே அண்டங்கள் நடுநடுங்க, கிடுகிடுக்க உலாவருபவை.

Updated On :13 நவம்பர் 2015, 9:18 am

மஹாசஷ்டியான இன்று மயில்விருத்தத்தின் இரண்டாம் பாடலைப் பார்க்கிறோம். இந்த இறைவன் போர்க்கோலம் கொண்டவன் என்பதனாலே இவன் தொடர்பான எல்லாமே அண்டங்கள் நடுநடுங்க, கிடுகிடுக்க உலாவருபவை. மானை அடித்து வீழ்த்திக் கவ்வும் அதே வாயால்தான் புலி தன் குட்டியைக் கவ்வி எடுக்கிறது. இரண்டுமே மாமிச வடிவங்கள்தாம் என்றாலும், இரண்டையும் கவ்வுவது அதே கூர்மையான பற்களையுடைய வாயால்தான் என்றாலும், தன்குட்டியைக் கவ்வும்போது சிறுகீறலும் ஏற்படாமல், பொட்டு ரத்தமும் கசியாமல் புலி கவ்வி எடுக்கிறது. முன்னது கொலைக் கவ்வல், பின்னது ஆதரவுக் கவ்வல்.

வேல், உலகைக் கலக்குபவர்களை எதிர்த்து உறுக்கியெழுகிறது; அன்பர்களைச் சுற்றிலும் நின்று எப்போதும் காக்கிறது. மயில் உலகம் கிடுகிடுக்க, மலைகளைத் தூளடித்துப் பறக்கிறது; அன்பர்களுக்குத் துயரம் நேருகையில் அதே வேகத்தில் வந்து அந்தத் துயரத்தைத் துகளடிக்கிறது. இரண்டு சமயங்களிலும் நிலவும் உக்கிரம் ஒன்றே, ஒன்று தாக்கக் கடிவது, இன்னொன்று காக்கக் கனிவது. சக்ரவாளகிரியைத் துகளடித்துப் பறக்கும் மயிலை குருநாதர் இந்தப் பாடலில் பாடுகிறார். இந்தப் பாடலின் கடைசியடியில் வரும் கல்லார கிரி என்பது செங்கழுநீர் மலை எனப்படும் திருத்தணிகை.

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி

பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு

தனிவெற்பும் அம்புவியும்எண்


திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு

சித்ரப் பதம்பெயரவே


சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்

திடுக்கிட நடிக்கு மயிலாம்


பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி

பத்மப் பதங் கமழ்தரும்


பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய

பரம உபதேசம் அறிவிக்


கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு

கந்தச்சுவாமி தணிகைக்


கல்லார கிரியுருக வருகிரண மரகத

கலாபத்தில் இலகு மயிலே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/232870685&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.