மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 430

சிவயோக நிலையைப் பேசும் இன்றைய பாடல்,

Updated On :9 டிசம்பர் 2016, 4:47 am

சிவயோக நிலையைப் பேசும் இன்றைய பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  ‘உன்னுடைய சக்தி வேலையும் கடப்ப மாலையையும் தந்தருள வேண்டும்’ என்று கோருகிறது.

அடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகள்; 1, 3, 5 ஆகிய சீர்களின் முதலெழுத்தும்; 2, 4,  ஆகிய சீர்களில் ஒற்று நீக்கி இரண்டாம் எழுத்தும் நெடில்; 2, 4, 6 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து மெல்லொற்று என்ற அமைப்பு முறையைக் கொண்டது.

தானதன தந்தான தானதன தந்தான
      தானதன தந்தான                   தனதான

நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
         நீளமக லஞ்சோதி                வடிவான
      நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
         நேர்மருவி யுண்காத             லுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
         சோதிமரு வும்பூமி               யவையூடே
      தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
         சோதிஅயி லுந்தாரு              மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
         வாய்விடவொ டெண்பாலு        முடுபோல
      வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
         மாமயில்வி டுஞ்சேவல்          கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
         மாடலரு ணஞ்சோதி             யருள்பாலா
      ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
         லாசைமரு வுஞ்சோதி            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.