பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 297

அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை

Updated On :8 ஜூலை 2016, 12:31 pm

பதச் சேதம்

சொற் பொருள்

ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே

 

ஈனம்: இழிவு;

யானும் உனக்கு அடிமை என வகையாக

 

 

ஞான அருள் தனை அருளி வினை தீர

 

 

நாணம் அகற்றிய கருணை புரிவாயே

 

 

தான தவத்தினின் மிகுதி பெறுவோனே

 

மிகுதி: மேன்மையான பகுதி;

சாரதி உத்தமி துணைவ முருகோனே

 

சாரதி: சரஸ்வதி (அல்லது) சா-ரதி: அந்த ரதி தேவி; துணைவ: சகோதரா;

ஆன திருப்பதிகம் அருள் இளையோனே

 

திருப்பதிகம்: தேவாரத் திருப்பதிகங்கள்; இளையோனே: ஞானசம்பந்தராக வந்தவனே;

ஆறு திரு பதியில் வளர் பெருமாளே.

 

 

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272416477&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p><p align="justify"><strong>ஈனமிகுத்துள பிறவி யணுகாதே</strong> ... இழிவு நிறைந்ததான பிறவிப் பிணி என்னை இனிமேல் அணுகாதபடி;</p><p align="justify"><strong>யானுமுனக்கு அடிமையென வகையாக</strong> ... நானும் உன்னுடைய அடிமையாகின்ற படிக்கு (பேற்றைப் பெற);</p><p align="justify"><strong>ஞானஅருள் தனையருளி</strong> ... மெய்ஞ்ஞானமாகிய உனதருளை அடியேனுக்கு அருள்வித்து;</p><p align="justify"><strong>வினைதீர</strong> ... என்னுடைய வினைகள் தீர்ந்து ஒழியவும்; <strong /></p><p align="justify"><strong>நாணம் அகற்றிய கருணை புரிவாயே</strong> ... நாணம் என்னும் தளையிலிருந்து அடியேனை விடுவிக்கக் கருணை புரிந்தருள வேண்டும்.</p><p align="justify"><strong>தானதவத்தினின்மிகுதி பெறுவோனே</strong> ... (அன்பர்கள் உன்னைக் குறித்தே செய்கின்ற) தானங்கள், தவங்கள் ஆகியவற்றின் மேன்மையான பகுதியைப் பெறுகின்றவனே!</p><p align="justify"><strong>சாரதியுத்தமி துணைவ முருகோனே</strong> ... உத்தமியான சரஸ்வதியம்மையின் சகோதரனே!</p><p align="justify"><strong>ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே</strong> ... (சிவபிரானுக்கு உகப்பு) ஆன பல தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராகத் தோன்றி, பாடியருளிய இளையவனே!</p><p align="justify"><strong>ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே.</strong> ... ஆறுபடை வீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!</p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை அடைபவனே!  சரஸ்வதி (அல்லது ரதி) தேவியின் சகோதரனே!  சிவபெருமானுக்கு உகப்பான தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராக அவதரித்துப் பாடியருளிய இளையவனே!  அறுபடைவீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!</em></p><p align="justify"><em>இழிவு மிகுந்ததான பிறவிப் பிணி என்னை இதற்குமேல் அணுகாத வண்ணமாக; உனது திருவருளாகிய ஞானத்தை அடியேனுக்கு அருளி, என் வினைகளைத் தீர்த்து, அடியேனுக்கு விலங்காகப் பூட்டப்பட்டுள்ள நாணம் என்னும் தளையை அறுத்து, நான் என்றென்றும் உன் அடிமையாக விளங்குவதற்கான திருவருளைப் புரிந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.