பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 300

வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது. 

Updated On :12 ஜூலை 2016, 11:02 am

வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது. 

‘சும்மா இரு சொல்லற’ என்று இறைவன் சொன்னதனாலோ என்னவோ அருணகிரியாரின் பாடல்கள் பல இடங்களில் ‘சும்மா இருத்தல்’ என்னும் மௌன நிலையைக் கேட்பதாக இருக்கும்.

சொல்லுகைக் கில்லையென்று எல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல
எனைவிட்டவா இகல் வேலனல்ல கொல்லியைச்
சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்னல் வல்லபமே.

என்பார் கந்தரலங்காரத்திலும்.  அந்தச் ‘சும்மா இருக்கும் எல்லை’தான் இன்றைய பாடலில் சொல்லப்படும், ‘மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே’ என்பதும்.  அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள் உள்ள பாடல்.  இரண்டாம் அரையடியான மடக்கடியில் தய்ய, தந்த என்னும் ஓசைகளைப் பெற்று வருகிறது.  பாடலைப் பார்ப்போம்.

தனதன தனன தனதன தனன
      தய்ய தனத்த தந்த                  தனதானா

அடலரி மகவு விதிவழி யொழுகு
         மைவரு மொய்க்கு ரம்பை        யுடனாளும்
      அலைகட லுலகி லலம்வரு கலக
         வைவர்த மக்கு டைந்து          தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
         டெல்லைவி டப்ர பஞ்ச           மயல்தீர
      எனதற நினது கழல்பெற மவுன
         வெல்லைகு றிப்ப தொன்று       புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
         வள்ளை யெனத்த யங்கு         மிருகாதும்
      மரகத வடிவு மடலிடை யெழுதி
         வள்ளிபு னத்தில் நின்ற           மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
         வெள்ளிம லைச்ச யம்பு          குருநாதா
      விகசித கமல பரிபுர முளரி
         வெள்ளிக ரத்த மர்ந்த            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273298049&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.