பதச் சேதம் | சொற் பொருள் |
அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும்
|
|
அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்
| குவாது: குதர்க்கம் (perverse talk); கேடிகள்: கேடு செய்பவர்கள் (ஆங்கிலத்தில் கேடி KD என்று சொல்லப்படுவது Known Depredator எனப் பொருள்படும்); |
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
| குமரி முதலானவற்றுக்குப் பொருளைக் கீழே காணவும். |
குறள் ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி குருபராரி விகாரி நமோகரி அபிராமி
|
|
சமர நீலி புராரிதன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி
|
|
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா
|
|
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா
| திமிதம்: பேரொலி; சுராரி: சுரர் அரி= தேவர்களின் பகைவர்; நிசாசரர்: இரவில் உலவுபவர்களான அசுரர்கள்; கடாவி: செலுத்தி; ஏய்: ஏய்ந்த, கூடிய; குணாலி: ஆரவாரக் கூத்து; நிணம்: கொழுப்பு; |
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே.
| சொணேசர: சோணேஸ்வரர்; அணாமலை: அண்ணாமலை; நவோநிலை: (கோபுரத்தின்) ஒன்பது நிலைகள்; |
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261630441&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர்</strong> ... ஊறுகின்ற அமுதத்தைப் போல இனிய சொற்களைப் பேசும் மயில்போன்ற பெண்கள்,</p><p align="justify"><strong>பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை</strong> ... பணம் படைத்தவர்களிடம், ‘என்மேல் ஆணை, உன்மேல் ஆணை (என்னை நீங்கக்கூடாது),</p><p align="justify"><strong>என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என</strong> ... ‘என் வீடு அருகில்தான் இருக்கிறது, அங்கே வரவேண்டும்’ என்றெல்லாம் பேசுகின்ற</p><p align="justify"><strong>உரை கூறும் அசடு மாதர் குவாது சொல் கேடிகள்</strong> ... அசட்டு மாதர்கள்; குதர்க்கமாகப் பேசிக் கேடுவிளைவிப்பவர்கள்;</p><p align="justify"><strong>தெருவின் மீது குலாவி உலாவிகள்</strong> ... குலவியபடி தெருவிலே திரிபவர்கள்;தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள்,</p><p align="justify"><strong>அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்</strong> ... இப்படிப்பட்டவர்களுடைய மாயவலை என்மீது படாமலும, நான் கெட்டுப் போகாமலும் இருக்க உன் அருளைத் தரவேண்டும்.</p><p align="justify"><strong>குமரி காளி வராகி மகேசுரி</strong> ... குமரி=சிறு பிராயத்தவள்; காளி=கரிய நிறங்கொண்டவள்; வராகி: வாராகி ரூபத்தவள்; மகேஸ்வரி;</p><p align="justify"><strong>கவுரி மோடி சுராரி நிராபரி</strong> ... கவுரி: பொன்னிறம் உடையவள் கௌரி; மோடி: மாயை; சுராரி: தேவர்களுக்குக் கண்போன்றவள்; நிராபரி: பொய்யற்றவள்;</p><p align="justify"><strong>கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி</strong> ... கொடிய சூலி: கொடுமையான சூலத்தை ஏந்தியவள்; சுடாரணி: ஒளிபொருந்தியவள்; யாமளி: பச்சை நிறமானவள்; மகமாயி ஆனவள்;</p><p align="justify"><strong>குறளு ரூப முராரி சகோதரி</strong> ... குறள் ரூப: வாமன வடிவம் கொண்ட; முராரி: முரன் என்னும் அசுரனை வதைத்த (திருமாலின்) சகோதரி;</p><p align="justify"><strong>உலக தாரி உதாரி பராபரி</strong> ... உலகதாரி: உலகத்தைத் தாங்கிக் காப்பவள்; உதாரி: தயாள குணம் கொண்டவள்; பராபரி: முதன்மையானவள்;</p><p align="justify"><strong>குருபராரி விகாரி நமோகரி அபிராமி</strong> ... குரு=சிவனுடைய, பராரி: கண்போன்றவள்; விகாரி: பலவிதமான வேறுபாடுகளைப் பூணவல்லவள்; நமோகரி: துதிக்கப்படுபவள்; அபிராமி: பேரழகுள்ளவள்;</p><p align="justify"><strong>சமர நீலி புராரிதன் நாயகி</strong> ... சமரநீலி: போரில் வல்ல துர்க்கை; புராரிதன் நாயகி: திரிபுரங்களை அழித்தவனின் தேவி;</p><p align="justify"><strong>மலை குமாரி கபாலி நல் நாரணி</strong> ... மலைகுமாரி: இமவான் மகள்; கபாலி: கபாலத்தை ஏந்தியவள்; நல் நாரணி: நற்குணம் வாய்ந்த நாராயணி;</p><p align="justify"><strong>சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி</strong> ... சலில(ம்): நீர்; சலிலமாரி: நீர்பொழியும் மேகத்தைப் போன்றவள்; மனோகரி: மனத்துக்குகந்தவள்; பரை: பராசக்தி; யோகியானவள்;</p><p align="justify"><strong>சவுரி வீரி முநீர் விட போஜனி</strong> ... சவுரி: வலிமை மிக்கவள் (சௌரி என்னும் திருமாலின் நாமம்); வீரி: வீரம் நிறைந்தவள்; முநீர்: கடல், பாற்கடல்; விடபோஜனி: ஆலகால விஷத்தை உண்டவள்;</p><p align="justify"><strong>திகிரி மேவு கையாளி செயாள்</strong> ... திகிரிமேவு கையாளி: கையிலே சக்கரத்தை ஏந்தியவள்; செயாள்: செய்யாள்—சிவந்தவளான இலக்குமி;</p><p align="justify"><strong>ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா</strong> ... ஒரு: ஒப்பற்ற; சகல: எல்லா; ஒப்பற்ற எல்லா வேதங்களுமாய் விளங்கும் தாயான உமாதேவியின் பாலனே!</p><p align="justify"><strong>திமிதம் ஆடு சுராரி நிசாசரர்</strong> ... பெரிய ஆரவாரத்தோடு போரடிய தேவர்களின் பகைவர்களான அசுரர்களுடைய,</p><p align="justify"><strong>முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு</strong> ... ஒவ்வொரு தலையிலும் படும்படியாக ஆயுதங்களைச் செலுத்தி;</p><p align="justify"><strong>ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா</strong> ... அங்கே ஒன்றுகூடிய சிலபேய்கள் ஆரவாரக்கூத்துடன் கொழுப்பு நிறைந்த மாமிசத்தை உண்ணும்படி வேலை விடுத்தவனே!</p><p align="justify"><strong>திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை</strong> ... மங்களம் நிறைந்த சோணாசலேஸ்வருடைய திருவண்ணாமலையில்,</p><p align="justify"><strong>முகில் உலாவு விமான நவோ நிலை</strong> ... மேகம் தவழும் கோபுரத்தினுடைய ஒன்பது நிலைகளையும் தாண்டி,</p><p align="justify"><strong>சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே.</strong> ... அந்தக் கோபுரத்தின் உச்சிமீது விளங்கித் தோன்றும் பெருமாளே!</p><p align="justify"> </p><p align="justify"><em><strong>சுருக்க உரை </strong> </em></p><p align="justify"><em>சிறுபிராயத்தவளான குமரியும்; கரிய காளியும்; வராகியும்; மகேஸ்வரியும்; பொன்னிறம்கொண்ட கௌரியும்; மாயை விளைப்பவளான மோடியும்; தேவர்களுக்குக் கண்போன்றவளும்; பொய்யற்றவளும்; கொடிய சூலத்தை ஏந்தியவளும்; ஒளிபொருந்தியவளும்; பச்சை நிறத்தவளும்; மகமாயியும்; வாமன ரூபம் தாங்கியவனும், முரன் என்ற அசுரனை வதைத்தவனுமான திருமாலின் சகோதரியும்; உலகத்தைத் தாங்கிக் காப்பவளும்; தயாள குணம் கொண்டவளும்; முதன்மை பூண்டவளும்; குருபரனாகிய சிவனுக்குக் கண்போன்றவளும்; வேறுபாடுகளைப் பூணவல்லவளும்; வணங்கப்படுவளும்; பேரழகு கொண்டவளும்; போரிலே வல்லவளான துர்க்கையும்; திரிபுரம் எரித்தவனின் தேவியும்; இமவான் மகளும்; நாராயணியும்; நீர்பொழியும் மேகத்தை ஒத்தவளும்; மனத்தை ஆள்பவளும்; பராசக்தியும்; யோகியும்; பராக்ரமம் நிறைந்தவளும்; வீரம் செறிந்தவளும்; கடலிலிருந்து கிளம்பிய ஆலகால விஷத்தை உண்டவளும்; கையிலே சக்கரத்தை ஏந்தியவளும்; திருமகளும்; ஒப்பற்ற எல்லா வேதங்களாகவும் நிறைந்த தாயும் ஆன உமை அருளிய பாலனே!</em></p><p align="justify"><em>அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசிக்கொண்டு, பணம் உள்ளவர்களிடம், ‘என் ஆணை, உன் ஆணை, என்னைவிட்டு நீர் நீங்கக்கூடாது; என்வீடு அருகில்தான் உள்ளது; அங்கே வரவேண்டும்’ என்றழைக்கும் அசட்டு மாதர்கள், குதர்க்கமாகப் பேசிக் கேடு விளைவிப்பவர்கள், தெருவிலே கொஞ்சிக் குலவித் திரிபவர்கள்—இத்தகையோருடைய மாயவலையில் நான் சிக்கிக்கொண்டு, கெட்டு அழியாமல் உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

