மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 424

பாடல்பெற்ற தலமான பெரும்புலியூருக்கான பாடலிது.

Updated On :28 நவம்பர் 2016, 6:30 pm

திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்ற தலமான பெரும்புலியூருக்கான பாடலிது.  ‘திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள்; 1, 3, 5 ஆகிய சீர்களின் மூன்றாம் எழுத்து மெல்லொற்று; 2, 4, 6 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; மூன்றாமெழுத்து வல்லொற்று என்று வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்த சந்தம்.

தனந்ததன தானத் தனந்ததன தானத்
      தனந்ததன தானத்                   தனதான

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
         சரங்களொளி வீசப்               புயமீதே
      தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
         சரங்கண்மறி காதிற்              குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
         றிரம்பையழ கார்மைக்    -   குழலாரோ
      டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
         றிரங்கியிரு தாளைத்  -     தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
         சிறந்தமயில் மேலுற்   -     றிடுவோனே
      சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
         சினந்தசுரர் வேரைக்  -     களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
         ப்ரசண்டஅபி ராமிக்  -  கொருபாலா
      பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
         பெரும்புலியுர் வாழ்பொற்  -  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.