/

பகுதி - 396

‘கண் பார்த்து அருளவேண்டும்’

Updated On :2 நவம்பர் 2016, 10:10 am

பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இன்றைய பாடல், இறைவனைக் ‘கண் பார்த்து அருளவேண்டும்’ என்று வேண்டுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள்; தொங்கல்சீர் நீங்கலாக அத்தனை எழுத்துகளும் குறில்.  ஆங்காங்கே பயிலும் மிகச்சில இடையொற்று மெல்லொற்றுகளைத் தவிர்த்து வேறெங்கும் ஒற்று பயிலவில்லை.  பாடலைப் பார்ப்போம்.

தனனதன தனனதன தனனதன தனனதன
      தனனதன தனனதன                தனதான

வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
         வயிரமர கதமகர                 மளவாக
      வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
         வளையிளைஞ ருயிர்கவர        வருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
         எழுபிறவி நெறியொழிய          வழிகாணா
      இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
         திருநயன கருணைசிறி           தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
         பயறுபெரு வயிறுநிறை           யவிடாமுப்
      பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
         பரியதனி யெயிறுகொடு          குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
         கடலுலகு நொடியில்வரு         மதிவேகக்
      கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
         கடகமுட னமர்பொருத           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.