மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 542

வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது

Updated On :24 ஏப்ரல் 2017, 6:30 pm

இளைத்துத் துவண்டு போகின்ற இந்த உடலைப் போற்றுகின்ற பொய்யனான நான் உன்னுடைய தூய்மையான திருவடி ஆண்டுகொள்ளும் வழி எதுவென்று அறிகிலேன்; என்னை ஆண்டுகொண்டருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் அரக்கோணத்துக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துகளாகவும்; கணக்கில் சேராத இரண்டாவது எழுத்து இடையின ஒற்றாகவும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளும் பயின்று வருகின்றன.

தய்யதன தான தய்யதன தான
      தய்யதன தான                      தனதான

இல்லையென நாணி யுள்ளதின் மறாம
         லெள்ளினள வேனும்             பகிராரை
      எவ்வமென நாடி யுய்வகையி லேனை
         யெவ்வகையு நாமங்             கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
         தொல்லைமுத லேதென்         றுணரேனைத்
      தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
         துய்யகழ லாளுந்                 திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
         மையவரை பாகம்                படமோது
      மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
         வள்ளிமலை வாழுங்             கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
         வெள்ளிலுட னீபம்               புனைவோனே
      வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
         வெள்ளிநகர் மேவும்              பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.