/

மாசுகள் அறக் கோரும் இப்பாடல் திலதைப்பதிக்கு உரியது.  திலதைப்பதி என்பது தற்காலத்தில் கோயிற்பத்து என்ற பெயரால் அறியப்படுகிறது.  தஞ்சையில் பேரளம் என்ற ஊருக்கு அருகே இருக்கிறது.  திருஞான சம்பந்த சுவாமிகளின் பாடல்பெற்ற தலம்.  இப்பாடலின் முதலடியை ‘இட்டு உ(ண்)ணல் ஏய்தரும் காலம் இறையத்தனையோ அதுதானும் இலை’ என்று கொண்டுகூட்டிக்கொள்ள வேண்டும். 

தொங்கல் சீரை ஒழித்து அடிக்கு இரண்டே சீர்களை உடைய சிறிய பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில், ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

           தனனத் தனனா தனதான
                       தனனத் தனனா தனதான

          இறையத் தனையோ அதுதானும்
                      இலையிட் டுணலேய் தருகாலம்

          அறையிற் பெரிதா மலமாயை
                      அலையப் படுமா றினியாமோ

          மறையத் தனைமா சிறைசாலை
                      வழியுய்த் துயர்வா னுறுதேவர்

          சிறையைத் தவிரா  விடும்வேலா
                      திலதைப் பதிவாழ் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.