மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 442

இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.

Updated On :1 ஜனவரி 2017, 6:30 pm

'உன் மலர்ப்பாதங்களை அளித்தருள வேண்டும்’ என்ற இறைவனைக் கேட்கும் இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று மூன்று ஐந்து ஆகிய சீர்களில் மூன்றாம் எழுத்து நெடில்; ஐந்தாம் எழுத்து வல்லொற்று;  நெடிலுடன் கூடிய சீரை மூன்று குறிலெழுத்துகளை உடைய சீர் மாறி மாறித் தொடர்வதால் ஓசையின்பம் சிறக்கிறது.

தனனாத் தனன தனனாத் தனன
      தனனாத் தனன                     தனதான

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
         நெடுநாட் பொழுது               மவமேபோய்
      நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
         நிறைவாய்ப் பொறிகள்           தடுமாறி      
மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி
         மடிவேற் குரிய                   நெறியாக
      மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
         மலர்தாட் கமல                  மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
         குளமாய்ச் சுவற                 முதுசூதம்
      குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
         கொதி வேற் படையை           விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
         அழியாப் புநித                    வடிவாகும்
      அரனார்க் கதித பொருள்காட் டதிப
         அடியார்க் கெளிய                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.