/

நற்கதியைக் கோரும் இப்பாடல் பழனிக்கானது. அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு அடி, மடக்கடியிலும் பயிலும் மூன்று சீர்களிலும் சமமாக ஐந்து ஐந்து எழுத்துகள் அமைந்துள்ளன.  இந்த ஐந்தெழுத்துகளும் குறிலெழுத்துகள்; ஒவ்வொரு சீரும் ஒரு வல்லொற்றோடு முடிவடைகிறது. 

தனதனதத் தனதனதத்
                             தனதனதத் தனதான

திடமிலிசற் குணமிலிநற்
                            றிறமிலியற் புதமான

செயலிலிமெய்த் தவமிலிநற்
                            செபமிலிசொர்க் கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற்
                            கியல்பிலிநற் றழிழ்பாட

இருபதமுற் றிருவினையற்
                            றியல்கதியைப் பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக்
                           கிளைமடியப் பொரும்வேலா

கிரணகுறைப் பிறையறுகக் 
                           கிதழ்மலர்கொக் கிறகோடே                       

படர்சடையிற் புனைநடனப்
                           பரமர்தமக் கொருபாலா

பலவயலிற் றரளநிறைப் 
                           பழநிமலைப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.