புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 682

பெரும் ஆசைச் செயல்களுக்கு ஆளாகி

News image
Updated On :2 நவம்பர் 2017, 6:30 pm

‘பெரும் ஆசைச் செயல்களுக்கு ஆளாகி நான் துன்பப்படாமல் தடுத்தாள வேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. ‘முத்தா முத்தி அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்று ஒரே மகுடத்தோடு முடிவடையும் பதினோரு பாடல்களில் இது பதினோராவது பாடல்.

அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில்.  ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.


தத்தா தத்தா தத்தா தத்தா
      தத்தா தத்தத்                       தனதான

பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
         தப்பே சிப்பொற்                  கனிவாயின்

பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
         ணைப்பூண் வெற்பிற்             றுகில்சாயக்

கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
         சுக்கே கைக்குத்                  திடுமாதர்

கட்கே பட்டே நெட்டா சைப்பா
         டுற்றே கட்டப்                    படுவேனோ

சொற்கோ லத்தே நற்கா லைச்சே
         விப்பார் சித்தத்                   துறைவோனே

தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்
         விக்கா முக்கத்                   தொடும்வேலா

முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
         முத்தாள் முத்தச்                 சிறியோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
         முத்தா முத்திப்                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.