புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 684

உன் திருவடிகளை விரும்பிப் போற்றும் மனம்

News image
Updated On :4 நவம்பர் 2017, 6:30 pm

‘உன் திருவடிகளை விரும்பிப் போற்றும் மனம் அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவலிதாயத்துக்கானது.  இத்தலம் சென்னை வில்லிவாக்கத்துக்கு சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட சிறிய பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு இடையின ஒற்றும்; இரண்டு நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குற்றெழுத்துகளும் பயில்கின்றன.


தனதய்ய தானதன                        தனதானா

மருமல்லி யார்குழலின்                   மடமாதர்
      மருளுள்ளி நாயடிய                 னலையாமல்

இருநல்ல வாகுமுன                      தடிபேண
      இனவல்ல மானமன                தருளாயோ

கருநெல்லி மேனியரி                      மருகோனே
      கனவள்ளி யார்கணவ               முருகேசா

திருவல்லி தாயமதி                       லுறைவோனே
      திகழ்வல்ல மாதவர்கள்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.