சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 860

யமபயம் கெடுவதைக் கோரும்..

News image
Updated On :21 ஜூன் 2018, 6:30 pm

யமபயம் கெடுவதைக் கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழிது 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன

                தாத்தத் தத்தன                                                          தனதான

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு

                        மூச்சுற் றுச்செயல்                                           தடுமாறி

      மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட

                         மூக்குக் குட்சளி                                                யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு

                        கூட்டிற் புக்குயி                                                  ரலையாமுன்

      கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்

                        கூட்டிச் சற்றருள்                                              புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்

                        காப்பைக் கட்டவர்                                            குருநாதா

      காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல

                        காப்புக் குத்திர                                                     மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்

                        வாய்க்குச் சித்திர                                              முருகோனே

      வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை

                        வாய்க்குட் பொற்பமர்                                   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.