ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

‘உனது திருவருள் துணை நிற்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட அமைப்பு.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தத்தன தாத்தன                    தனதானா

சமய பத்திவ்ரு தாத்தனை                 நினையாதே

  சரண பத்மசி வார்ச்சனை                தனைநாடி

அமைய சற்குரு சாத்திர                   மொழிநூலால்

  அருளெ னக்கினி மேற்றுணை           தருவாயே

உமைமு லைத்தரு பாற்கொடு             அருள்கூறி

  உரிய மெய்த்தவ மாக்கிந                லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய                திறலோனே

  சமண ரைக்கழு வேற்றிய               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.