தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 906

எப்போதும் திருத்தணிகையில் வாசம்..

News image
Updated On :15 செப்டம்பர் 2018, 6:30 pm

‘எப்போதும் திருத்தணிகையில் வாசம் செய்யும் பேறு கிடைக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்  என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

            தனத்தன தனத்தந்                                      தனதான

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்

                  கரிக்குவ டிணைக்குந்                           தனபாரக்

            கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்

                  கலைத்துகில் மினுக்யும்                    பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்

                  தவிர்த்துன துசித்தங்                           களிகூரத்

             தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்

                  தலத்தனி லிருக்கும்                            படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்

                  பொடிப்பணி யெனப்பன்                       குருநாதா

            புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்

                  புகழ்ச்சிய முதத்திண்                           புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்

                  தெறிப்புற விடுக்குங்                            கதிர்வேலா

            சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்

                   திருத்தணி யிருக்கும்                         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.