சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 910

உனது திருவடிகளைத் தந்து...

News image
Updated On :20 செப்டம்பர் 2018, 6:30 pm

‘உனது திருவடிகளைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்’ என்று கோரும் இப் பாடல் மயிலம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலுமாக அமைந்திருக்கின்றன.

தனதந்த தானன தானா தானா

            தனதந்த தானன தானா தானா

            தனதந்த தானன தானா தானா                                  தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ

                  விடமிஞ்சு பாதக வேலோ சேலோ

                  குழைகொண்டு லாவிய மீனோ மானோ          எனுமானார்

      குயில்தங்கு மாமொழி யாலே நீரே

                  யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்

                  குளிர்கொங்கை மேருவி னாலே நானா            விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா

                  யலையம்பு ராசியி னூடே மூழ்கா

                  வுடல்பஞ்ச பாதக மாயா நோயா                         லழிவேனோ

      உறுதண்ட பாசமொ டாரா வாரா

                  எனையண்டி யேநம னார்தூ தானோர்

                  உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா              ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ

                  எனநின்று வாய்விட வேநீள் மாசூ

                  ரணியஞ் சராசனம் வேறாய் நீறா                        யிடவேதான்

      அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ

                  ரனலங்கை வேல்விடும் வீரா தீரா

                  அருமந்த ரூபக ஏகா வேறோர்                             வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்

                  குறமங்கை யாளுட னேமா லாயே

                  மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ்          குமரேசா

      மதிமிஞ்சு போதக வேலா ஆளா

                  மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா

                  மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்       பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.