அரசு அலுவலகங்களில் வாரத்துக்கு ஆறு நாள்கள் வேலை திட்டத்தை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவது குறித்து வருகிற ஜூன் மாதத்துக்குப் பிறகு பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் இருந்துதான் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை திட்டம் அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டது. இது எப்படி செயல்படுகிறது என்பதை ஓராண்டு காலம் நடைமுறைக்கு பிறகு பரிசீலிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். உடனடியாக பழையபடி ஆறு நாள் வேலை திட்டத்தை அமலுக்குக் கொண்டுவரும் யோசனை இல்லை.
வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்ததை அடுத்து அரசு அலுவலர்களின் பணி நேரமும் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வியாழன் அல்லது செவ்வாயன்று பொது அல்லது தேசிய விடுமுறை வந்தால் முதல் நாளோ அல்லது மறுநாளோ லீவ் போட்டுவிட்டுச் சென்றுவிடும் நிலை இருக்கத்தான் செய்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமே என்று அமைச்சர் சொன்னார்.
எனவே, ஓராண்டு கால நடைமுறை அனுபவத்துக்குப் பிறகு இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்று நெடுஞ்செழியன் சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

