வகுப்பு முறையில் தேசத்தின் எல்லைகளை வகுக்க முடியாது. ஏனென்றால், எந்த தேசத்தின் எல்லையும் வகுப்பு முறையில் வகுக்கப்பட்டதில்லை. அம்மாதிரி வகுக்கப்பட்டிருந்தால், அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு முஸ்லிம்கள் வந்திருக்க முடியாது.
உலகத்தில் உள்ள 60 கோடி முஸ்லிம்களைக் கொண்ட தனி அரசாங்கம் நிறுவ முடியுமா? முடியாது. எந்த மதத்தையும் ஆதாரமாகக் கொண்டு உலகில் எந்த பாகத்திலும் தனி அரசாங்கம் நிறுவப்படவில்லை என்று ஆவூர் ரேஞ்சு அரசியல் மாநாட்டு வரவேற்பு கமிட்டி தலைவர் ஸ்ரீ கமெ.பக்கீர் முகம்மது பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
பெரும்பாலும் கிருஸ்துவர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை வளர்ப்பதற்காக போராடுகின்றன. மதத்தின் பேரில் நிறுவப்படும் அரசாங்கங்களை எந்த தேசத்தாரும் விரும்பமாட்டார்கள். இந்தியாவைப் பிரிப்பதால் முஸ்லிம்களுக்கோ, ஹிந்துக்களுக்கோ அல்லது வேலு மைனாரிட்டிகளுக்கோ நன்மை ஏற்படப் போவதில்லை. ஆகையால் ஏகாதிபத்யத்தை அகற்ற விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் அரசியல் நிர்ணய சபை கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
மெஜாரிட்டியார் மைனாரிட்டியார் பரஸ்பரம் நல்லெண்ணத்தால்தான் வாழ முடியுமென்றும், பிரிவினையால் முஸ்லிம்களுக்கு அதிக சலுகையோ சௌகர்யமோ எதுவும் கிடைக்காது. அரசியல் நிர்ணய சபையின் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

