தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (25.04.1950) காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்கு வெளியிலேயே தீர்க்கலாம்; நாம் அழிந்தால் ஆசியாவுக்கு விமோசனமில்லை - பாக்

காஷ்மீர் தகராறு சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பந்தோபஸ்து கவுன்சிலுக்கு வெளியிலேயே ஒரு சமரசம்

News image
Updated On :24 ஏப்ரல் 2015, 12:11 pm


காஷ்மீர் தகராறு சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பந்தோபஸ்து கவுன்சிலுக்கு வெளியிலேயே ஒரு சமரசம் செய்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளிநாட்டு இலாகா மந்திரி ஸர். முகம்மது ஜாபருல்லாகான் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கு காஷ்மீர் தகராறுதான் முக்கிய இடையூறென்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.

லியாகத் அலிகானும் நேருவும் சந்திக்கும்போது காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேசப்படலாமென்றும், ஆனால் இதுபற்றி தமக்கு திட்டமாக ஒன்றும் தெரியாதென்றும், டில்லியில் இரு பிரதமர்களும் சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேச முயற்சி நடந்ததாகத் தாம் அறிவதாகவும் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டிய அவசியம் பற்றி அவர் குறிப்பிட்டு, நம் இரு நாடுகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், கிழக்கத்தி நாடுகளிடையிலேயே இவைதான் பெரிய தொகுதியாகும். நாம் அழிந்தால் ஆசியாவுக்கு விமோசனமில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.