காஷ்மீர் தகராறு சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பந்தோபஸ்து கவுன்சிலுக்கு வெளியிலேயே ஒரு சமரசம் செய்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளிநாட்டு இலாகா மந்திரி ஸர். முகம்மது ஜாபருல்லாகான் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கு காஷ்மீர் தகராறுதான் முக்கிய இடையூறென்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
லியாகத் அலிகானும் நேருவும் சந்திக்கும்போது காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேசப்படலாமென்றும், ஆனால் இதுபற்றி தமக்கு திட்டமாக ஒன்றும் தெரியாதென்றும், டில்லியில் இரு பிரதமர்களும் சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேச முயற்சி நடந்ததாகத் தாம் அறிவதாகவும் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டிய அவசியம் பற்றி அவர் குறிப்பிட்டு, நம் இரு நாடுகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், கிழக்கத்தி நாடுகளிடையிலேயே இவைதான் பெரிய தொகுதியாகும். நாம் அழிந்தால் ஆசியாவுக்கு விமோசனமில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


