மதுரை நகர சபையினர் அளித்த வரவேற்புக்கு ராஜாஜி நன்றி தெரிவித்துப் பேசியதாவது -
சர்க்காருடன் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கு மார்க்கம். எனக்கு இவ்வளவு கோலாகல வரவேற்பு அளிக்க நீங்கள் ஏற்பாடு செய்தீர்கள். ஆயினும் நான் என்னை மதுரைவாசியாகவே கருதுகிறேன். என்னிடம் உங்களுக்கு உள்ள அன்பையும் அபிமானத்தையும் இந்த வரவேற்பு ரூபத்தில் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். இதற்கு நான் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.
சிலர் சூழ்ச்சி செய்து என்னை இந்தப் பதவியில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள். ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பிய நான் இந்தப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றத் தயங்கினேன். ஆயினும், மக்கள் அன்போடு என்னுடன் ஒத்துழைத்தால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். பிறகு எல்லாம் சுலபமாய்ப் போய்விடும். கஷ்டமே இருக்காது.
ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், அதன் மூலம் எல்லோருக்கும் நன்மை விளையும். பரஸ்பர நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கு மார்க்கங்கள்.
இப்போதைய விலைவாசிகள், இதர சந்தர்ப்பங்கள் காரணமாக நகர சபைகளின் திட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை. ஆகவே, நிலைமை மாறும் வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
நம் நாடு முழுதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் இருக்கிறது. அதேபோல் நிதி விஷயத்திலும் நாடு ஒரே உறுப்பாய் இருக்கிறது. அத்தனால், மத்திய சர்க்கார் வகுக்கும் திட்டங்களை அனுசரித்தே நாம் நடக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


