முக்கியமான நகரங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் உணவு தானியங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்வது பற்றி ராஜ்ய சர்க்கார்களுடன் மத்திய சர்க்கார் கடிதப் போக்குவரத்து நடத்திவருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய உணவு இலாகா துணை மந்திரி ஏ.எம்.தாமஸ், மக்களவையில் இதைத் தெரிவித்தார். மத்திய சர்க்காருடன் கலந்தாலோசித்து, பிஹார் சர்க்கார் நகரப் பகுதிகளில் குடும்ப அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட அளவு தானியம் என நிர்ணயிக்கப்பட்டு அது நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அடையாள அட்டை முறையினால் நியாய விலைக் கடைகளில் நிகழும் பல ஒழுங்கீனங்களை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்கத்திலும், ஒரு தினுசான பங்கீடு அமலில் இருக்கிறது என்றும், அரிசி, கோதுமை விநியோகத்துக்கு மற்றப் பிரதேசங்களிலும் அடையாள அட்டை முறையை அமலுக்குக் கொண்டு வரும் விஷயம் சர்க்கார் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


