மதுரையைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர்.
அந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க நூதன முறைகளைக் கையாண்டு வந்ததாகவும், திருச்சியில் பல வீடுகளில் புகுந்து தன் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்கு இரு குழந்தைகளைக் கூட்டிச் செல்வாராம். வரும் வழியில் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இந்த இரு குழந்தைகளும் தனது குழந்தைகள் என்றும் மனைவியின் உடலை அடக்கம் செய்ய பணம் தேவை என்றும் கூறுவாராம்.
வீட்டுப் பெண்மணி சிறிது பணம் கொடுப்பதற்காக உள்ளே செல்லும் சமயத்தில் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் நகைகளையும் மேலும் அங்கு கையில் அகப்படும் விலை உயர்ந்த பொருள்களையும் களவாடிக்கொண்டு ஓடிவிடுவாராம்.
திருச்சியில் ஒரு வீட்டில் அவ்வாறு திருட முயலும்போது அந்த ஆசாமி பிடிபட்டான். திருச்சியில் மட்டும் ஒன்பது வீடுகளில் அந்த ஆசாமி அவ்வாறு திருடியதாகத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


