எந்தக் கணக்கையும் சில விநாடிகளில் விடை கண்டுபிடித்துக் கூறும் அதிசயத் திறன் படைத்த ராஜு சோமவாசி என்ற 13 வயது சிறுவன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.
கோலாப்பூரில் வசிக்கும் மனித கம்ப்யூட்டர் போல் இயங்கும் ராஜுவின் திறமையைச் சோதிக்க பல துறையினரும் ஆர்வத்துடன் வருகின்றனர்.
ஒருவர் தனது பிறந்த தேதி, மாதம், ஆண்டைக் கூறினால், உடனே அந்தத் தேதிக்கான கிழமையை ராஜு கூறிவிடுகிறான். சமீபத்தில் அதே கிழமையில் எப்போது பிறந்த தேதி வரும் என்ற விவரத்தையும் கணித்துக் கூறுகிறான்.
ஒரு பென்சிலும் காகிதமும் வைத்துக்கொண்டு எல்லா வகையான கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற கணக்குகளுக்கு விடை கூறுகிறான். இத்தனைக்கும் ராஜூ கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் தேறவில்லை. எனவே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான்.
தனக்குள்ள திறமை பற்றி சமீபத்தில் அவனுக்குத் தெரிந்ததாம். அவனது கணிதத் திறமையை மெச்சி யாராவது பணம் கொடுத்தால், இதெல்லாம் நான் கேட்டேனா என்று கூறியவாறே அதை வாங்கிக்கொள்கிறான். தன் வருங்காலம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறான் இந்த இளம் கணித மேதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


