சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(11.07.1983)தந்தையின் 18-வது திருமணத்துக்கு மகன் எதிர்ப்பு - தந்தை பிடிவாதம்

18-வது முறையாக புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு தம் புதல்வர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று ஒரு விவசாயி புகார் செய்துள்ளார்.

News image
Updated On :10 ஜூலை 2015, 9:45 am

18-வது முறையாக புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு தம் புதல்வர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று ஒரு விவசாயி புகார் செய்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு வயது 60 ஆகிறது. 30 வருடங்களில் இவர் 17 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

முன்னதாகச் செய்துகொண்ட 17 திருமணங்களிலும் மகிழ்ச்சி ஏற்படவில்லை, திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கான முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. தற்போது மற்றுமொரு திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும்போது, இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் சேர்ந்து தாக்கினர் என்று அந்த விவசாயி புகாரில் கூறியுள்ளார்.

எந்தவித இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார் அந்த விவசாயி.

இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் 4 பெண்களை திருமணம் செய்து வைத்துக்கொள்ளலாம். முதல் மனைவி எழுத்து மூலம் கொடுத்த உத்தரவை அடுத்தே ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசின் குடும்ப நலச் சட்டம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.