ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆறு மாத கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று மாநில ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்திருந்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று, இந்திய அரசியல் சட்டத்தின் 356-வது விதியின்கீழ் இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார்.
குடியரசுத் தலைவரின் பிரகடனத்தின்படி ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் அனைத்து அதிகாரங்களும், கடமைகளும் மாநில ஆளுநரிடம் விடப்பட்டுள்ளது. மாநில சட்டப் பேரவையின் அதிகாரங்களை நாடாளுமன்றம் செயல்படுத்தும்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கென அரசியல் சட்டத்தில் சிறப்பு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி அந்த மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் ஆளுநர் ஆட்சியை நீடிக்க முடியாது.
ஜம்மு - காஷ்மீரில் ஜூலை 19-ம் தேதி ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த மாநில ஆளுநராக ஜக் மோகன் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து அன்றைய முதலமைச்சர் பாரூக் அப்துல்லா பதவி விலகியதை தொடர்ந்து ஆளுநர் ஆட்சியின் கீழ் அந்த மாநிலம் கொண்டு வரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


