சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(26.07.1998)காவிரிப் பிரச்னைக்கு ஆகஸ்ட் 12-க்குள் தீர்வு - வெங்கையா நாயுடு நம்பிக்கை

காவிரிப் பிரச்னை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த விசாரணைக்கு முன்பாக (அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்பாக) அனைவரும் ஏற்கக்கூடிய தீர்வு காணப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

News image
Updated On :21 ஜூலை 2015, 12:34 pm

காவிரிப் பிரச்னை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த விசாரணைக்கு முன்பாக (அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்பாக) அனைவரும் ஏற்கக்கூடிய தீர்வு காணப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது -

மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது திமுகவின் தோழமைக் கட்சியான ஜனதா தளம் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது. ஆனாலும்கூட கருணாநிதியால் காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

20 ஆண்டுகளாக இப்பிரச்னை இருந்து வருகிறது. மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை மூலமோ வேறு வழிகளிலோ தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் எழுப்ப அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு. இப்பிரச்னை தொடர்பாக இந்த ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை அவர் விலக்கிக்கொள்ள மாட்டார்.

காவிரிப் பிரச்னை காரணமாக இந்த ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வராது. இப்பிரச்னையைத் தீர்ப்பதில் பாஜக தலைமைக்கு எந்த அளவுக்கு அரசியல் உறுதி இருக்கிறது என்பதை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.