சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(03.08.1940)மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர் காலமானார்

மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர், பெங்களூர் அரண்மனையில் அமைதிகரமாகக் காலமானார். அவருக்கு வயது 57.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2015, 9:56 am

மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர், பெங்களூர் அரண்மனையில் அமைதிகரமாகக் காலமானார். அவருக்கு வயது 57.

சில நாள்களுக்கு முன் மகாராஜாவுக்கு இதய நோய் கண்டது. குணமாகி வந்து மீண்டும் அந் நோய் ஏற்படவும் மரணம் நேர்ந்தது. மரண தருவாயில் மகாராணி, யுவராஜா, யுவராணி, திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் முதலிய முக்கிய சர்க்கார் ஆபீஸர்கள் அரண்மனையில் பிரசன்னமாகி இருந்தார்கள்.

நாளை மைசூரில் தகனக்கிரியை நடைபெறும். மகாராஜா உடலுடன் திவான் ஸர். மிர்ஸா இஸ்மாயில் மைசூருக்குப் புறப்படுகிறார். மகாராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அறிகுறியாக நாளை முதல் 13 தினங்கள் வரையில், சமஸ்தானம் எங்கும் உள்ள சர்க்கார் ஆபீஸ்கள், கோர்ட்டுகள், கல்வி ஸ்தாபனங்கள் இவைகளை மூடிவிட வேண்டும் என்ற உத்தரவு வெளியிட்பட்டுள்ளது.

மகாராஜா மறைவையொட்டி, மகாராஜாவின் வயதை ஒத்தாற்போல் பெங்களூரிலும் மைசூரிலும் 57 குண்டுகள் போடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.