மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர், பெங்களூர் அரண்மனையில் அமைதிகரமாகக் காலமானார். அவருக்கு வயது 57.
சில நாள்களுக்கு முன் மகாராஜாவுக்கு இதய நோய் கண்டது. குணமாகி வந்து மீண்டும் அந் நோய் ஏற்படவும் மரணம் நேர்ந்தது. மரண தருவாயில் மகாராணி, யுவராஜா, யுவராணி, திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் முதலிய முக்கிய சர்க்கார் ஆபீஸர்கள் அரண்மனையில் பிரசன்னமாகி இருந்தார்கள்.
நாளை மைசூரில் தகனக்கிரியை நடைபெறும். மகாராஜா உடலுடன் திவான் ஸர். மிர்ஸா இஸ்மாயில் மைசூருக்குப் புறப்படுகிறார். மகாராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அறிகுறியாக நாளை முதல் 13 தினங்கள் வரையில், சமஸ்தானம் எங்கும் உள்ள சர்க்கார் ஆபீஸ்கள், கோர்ட்டுகள், கல்வி ஸ்தாபனங்கள் இவைகளை மூடிவிட வேண்டும் என்ற உத்தரவு வெளியிட்பட்டுள்ளது.
மகாராஜா மறைவையொட்டி, மகாராஜாவின் வயதை ஒத்தாற்போல் பெங்களூரிலும் மைசூரிலும் 57 குண்டுகள் போடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


