தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (14.06.1954)ரூ.250 பெறுமான தங்கச் சங்கிலி எட்டணாவுக்கு விற்ற பெண் கைது

நான்கு சவரன் எடையுள்ள, சுமார் 250 ரூபாய் பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியை வெறும் எட்டணாவுக்கு விற்ற பதினோரு வயது முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :13 ஜூன் 2015, 9:47 am

நான்கு சவரன் எடையுள்ள, சுமார் 250 ரூபாய் பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியை வெறும் எட்டணாவுக்கு விற்ற பதினோரு வயது முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர் பேரக்ஸ் வாசியான ஸ்ரீ அப்துல் ஜபார் என்பவர் வீட்டில் இருந்து இந்தச் சங்கிலி களவாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் இருந்தவர்கள் பல வேலைகளில் மும்முரமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள் என்றும், அப்போதுதான் இந்த செயின் திருடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்களவு பற்றி ஓட்டேரி போலீஸாரிடம் உடனே புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, மேற்படி செயினை திருடியதாக ஓட்டேரியைச் சேர்ந்த மெஹபூர் பீபீ என்ற பதினோரு வயது முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார். அவர், ஜார்ஜ் டவுன், நைனியப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு மில் ஊழியரிடம் எட்டணாவுக்கு அந்தச் சங்கிலியை விற்றதாகத் தெரிந்தது. அந்த மில் ஊழியரிடம் இருந்து தங்கச் சங்கிலியை போலீஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பெண் ரிமாண்ட் செய்யப்பட்டாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.