கோவையில் ஒரு கம்பெனிக்கு சொந்தமான செக்கில் பொய் கையெழுத்து போட்டு, பாங்கியில் இருந்து ரூ.2000 வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸ் வலை போட்டு தேடி வருகிறது.
அந்தக் கம்பெனி மேட்டுப்பாளையம் ரோடில் இருக்கிறது. செக்கில் பொய் கையெழுத்து போட்டு தனது பாங்கு கணக்கில் இருந்து யாரோ ஒருவர் ரூ.2000 வரை எடுத்துள்ளதாக அக்கம்பெனி போலீஸில் புகார் செய்துள்ளது.
இது சம்பந்தமாக போலீஸார் விசாரித்ததில் இருந்து தெரிய வந்துள்ளதாவது -
கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஜவுளி கடைக்குச் சென்று ஒரு நபர் ரூ.500 பெறுமான ஜவுளி வாங்கிக் கொண்டு அத்தொகைக்காக ரூ.2000-க்கு ஒரு செக்கை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்தாராம். அக்கடைக்காரர் உடனே அந்த செக்கை தமது ஆள் ஒருவரிடம் கொடுத்து பாங்குக்குச் சென்று மாற்றிவரச் சொன்னார். அந்த ஆள் சென்று செக்கை பாங்கில் கொடுத்து பணமாக மாற்றி வந்தார். கடைக்காரர் தமக்குச் சேர வேண்டிய ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பாக்கியை அந்த நபரிடம் கொடுத்தார்.
அந்த செக் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கம்பெனிக்குச் சொந்தமானது என்றும், அந்த நபர் அந்த செக்கில் பொய்க் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அப்துல் ஹமீது என்று அந்த நபர் தம்மை சொல்லிக்கொண்டாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


