தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(10.05.1968)தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு நெடுநாளாகிவிட்டது - தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை

தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு நெடுநாளாகிவிட்டது என்று தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தார்.

News image
Updated On :9 மே 2015, 8:56 am

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சுதந்தரத் தமிழ்நாடு கொடி இயக்கம் நடப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாதிரியான செயலை மக்கள் கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை கூறினார்.

சுதந்தரத் தமிழ்நாடு கொடி இயக்கம் போன்ற தேசிய விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நான்கு அல்லது ஐந்து சுவரொட்டிகளில் தேசிய விரோத வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் சுதந்தரத் தமிழ்நாடு கொடி ஏற்றப்படும் என்ற அறிவிப்பு காணப்பட்டது. இதைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டு, அண்ணாதுரை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு நெடுநாளாகிவிட்டது என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

இந்தியாவில் தலைசிறந்த ராஜ்யமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். இதற்கு முயல்வேன். ஆனால், இந்திய அரசுக்கு குந்தகமாக எதையும் செய்ய மாட்டேன் என்று அண்ணாதுரை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.