தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (22.05.1980)மக்கள் பயமின்றி வாக்கு போட பாதுகாப்பு: போலீஸ் டைரக்டர் ஜெனரல் உறுதி

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்காளர்கள் பயமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.ஷெனாய் தெரிவித்தார்.

News image
Updated On :20 மே 2015, 11:49 am

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்காளர்கள் பயமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.ஷெனாய் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல போலீஸ் உதவி என்கிற அடிப்படையில் அண்டை மாநிலங்களில் இருந்து தேவையான போலீஸ் படை தருவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வட ஆற்காடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற நக்ஸலைட் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளவர்களை அடுத்த ஒரு வார காலத்துக்குள் கைது செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தேர்தல் மோதல்கள், கலவரங்கள் அதிகரித்து வருவது பற்றி கேட்டதற்கு, இவற்றைத் தவிர்க்க பொது மக்களும் குறிப்பாக அரசியல் கட்சியினரும் போலீஸாருடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைக்க வேண்டும். கூடுமான வரையில் தனி நபர் தாக்குதல் அல்லது விமர்சனத்தைத் தவிர்த்தும், வெறியூட்டக்கூடிய பிரசாரங்களைத் தவிர்த்தும் தேர்தல் கூட்டங்களில் பேசுவது அனைவருக்கும் நல்லது.

அத்துடன், அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரசாரக் கூட்டங்களை முறையாக வகுத்துக்கொண்டு முன்கூட்டியே போலீஸுக்கு தெரிவிப்பதுடன் முன்னேற்பாடு ஏதுமில்லாமல் திடீர் திடீர் என்று வழியில் கூட்டங்களில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். முறைப்படி சுற்றுப் பயண திட்டம் வகுத்துக் கொண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் வன்முறையில்லை என்ற நல்ல பாரம்பரியத்துக்கு வழிகாட்டியாக ஆக முடியும்.

இதை அனைத்து அரசியல் கட்சியினரும் செய்வார்கள் என்று நம்புவதாக ஷெனாய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.