கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.
ராஜபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் திருமதி ஜோதி வெங்கடாசலம், அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
கருணாகரன் மந்திரி சபைதான் இதுவரை கேரளத்தில் ஏற்பட்ட மந்திரி சபைகளிலேயே பெரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள 13-வது மந்திரி சபையாகும்.
இதுவரை ஈ.கே.நாயனாரின் (இடது கம்யூ) மந்திரி சபைதான் பெரிதாக இருந்தது. அதில் 17 பேர் இருந்தார்கள்.
இப்போதைய மந்திரி சபை, கடந்த 5 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள ஏழாவது மந்திரி சபையாகும். மூன்றாவது தடவையாக, அதுவும் 5 ஆண்டு காலத்துக்குள் முதலமைச்சராகும் பெருமை கருணாகரனுக்கு உண்டு.
19 பேர் கொண்ட மந்திரி சபையில் 10 பேர் முதல் தடவையாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் அமைச்சர் திருமதி கமலம். வயலார் ரவி, கர்த்தா, பத்மராஜன் முதல் தடவையாக அசெம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


