தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(24.05.1982)கேரளத்தின் மிகப்பெரிய மந்திரி சபை - கருணாகரன் தலைமையில் பதவியேற்றது

கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

News image
Updated On :20 மே 2015, 11:55 am

கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

ராஜபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் திருமதி ஜோதி வெங்கடாசலம், அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

கருணாகரன் மந்திரி சபைதான் இதுவரை கேரளத்தில் ஏற்பட்ட மந்திரி சபைகளிலேயே பெரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள 13-வது மந்திரி சபையாகும்.

இதுவரை ஈ.கே.நாயனாரின் (இடது கம்யூ) மந்திரி சபைதான் பெரிதாக இருந்தது. அதில் 17 பேர் இருந்தார்கள்.

இப்போதைய மந்திரி சபை, கடந்த 5 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள ஏழாவது மந்திரி சபையாகும். மூன்றாவது தடவையாக, அதுவும் 5 ஆண்டு காலத்துக்குள் முதலமைச்சராகும் பெருமை கருணாகரனுக்கு உண்டு.

19 பேர் கொண்ட மந்திரி சபையில் 10 பேர் முதல் தடவையாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் அமைச்சர் திருமதி கமலம். வயலார் ரவி, கர்த்தா, பத்மராஜன் முதல் தடவையாக அசெம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.