தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(26.05.1984)1985-86 கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இருந்து தொழில் கல்வி - முதல்வர் எம்ஜிஆர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி ஆண்டில் (1985-86) இருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் வருடம் ஒன்றுக்கு 2 செட்டு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார்.

News image
Updated On :25 மே 2015, 12:13 pm

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி ஆண்டில் (1985-86) இருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் வருடம் ஒன்றுக்கு 2 செட்டு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார்.

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஒன்றாவது வகுப்பு முதற்கொண்டே தொழில் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

அடுத்த வருடம் துவங்கும் 7-வது திட்ட பணிகளின் துவக்கத்தில் இருந்தே மேற்கூறிய இரண்டு திட்டங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் கூறினார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொழில் கல்விமுறையை அமல்படுத்த, 8-வது நிதிக் கமிஷனின் ஒதுக்கீடு மூலம் உதவுமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.