எல்லைக் கோடு: சசி எழில்மணி

Updated on
1 min read

வாழும் மக்கள் யாவரும்
அமைதியாகத் தான் வாழ
எல்லையில்  பணி புரிவார்
அண்டைநாட்டு  அயலாரும்
அனுமதியின்றி உள்நுழைய
எதிர்த்து நின்றே முறியடிப்பார்
தீவிரவாதியும்
பிரிவினைவாதியும்
கொடுஞ்செயல் செய்யவே
திட்டங்கள் தீட்டிட
தன்னுயிரைக் கருதாது
நாட்டுக்கென அர்ப்பணிப்பார்
உறக்கம் மறந்து
உறவைத் துறந்து
சரிவர உணவும்
உண்ணாமல் கிடந்து
சீருடை அணிந்து
காடுகளில் திரிந்து

ஆயுதம் ஏந்தியே
பல இடம் நடந்து
காத்திடுவார் நம்நாட்டை
கொண்டாடுவோம் அவர் அர்ப்பணிப்பை
போற்றிடுவோம் எல்லைக் கோட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com