/

எல்லைக்கோடு: மீனாள் தேவராஜன்

Updated On :21 ஆகஸ்ட் 2016, 12:06 pm

நீலவானத்திற்கு உண்டோ கட்டுப்பாடு
நெடுங்கடலுக்கு உண்டோ கட்டுப்பாடு
சுழன்றுவீசும் காற்றுக்கு உண்டோ கட்டுப்பாடு
சூழ்ச்சியால் அத்துமீறல் அவற்றில் காணவியலாது
நாட்டுக்கும் அண்டை நாட்டுக்குமிடையே
வீட்டுக்கும் அண்டை வீட்டுக்கும் இடையே
சண்டை வராமல் தடுக்கும் எல்லைக்கோடு
உண்டானது மனிதன் தன்னல வெளிப்பாடு!
தானத்திற்கு உண்டோ அளக்கும் சால்
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
வரம்பு மீறி வருகையில் சுதந்திரம் காக்கும்
வரப்பு எல்லைக்கோடு வேண்டும்தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.