பட்டாசுச்சத்தம்: மீனா தேவராஜன்

Updated on
1 min read

தீபாவளிக்குத் தீபாவளி தெருவெங்கும்
தீயொளியுடன் வெடிக்கும் பட்டாசு எங்கும்
வெடிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் எங்கும்
பொட்டு வெடியும் பட்டதும் சத்தம் எழுப்பிடுமே!

பட்டாசு வைக்கும்போது பட்டென வெடிப்பது
சட்டென மனம் பரவசம் அளிப்பது
வெடித்துச் சிதறி விழுபுண் தோன்றுவது
வேண்டாத வேதனையல்லவா பாலகரே!

சுதந்திரமாய் வாழும் சிட்டுக்குருவிகளை
சுற்றுச்சூழலைக் காக்கும் சின்னப்பறவைகளை
புல்லினங்களை விருத்திக்கும் புள்ளினங்களை
வெடிச்சத்தம் மிரட்டி அடிக்குதே பாலகரே!

அச்சத்தால் பூமிவிட்டு அழிகின்றனவே
மிச்சம் இருப்பது எச்சங்கூட இல்லையே!
காரியத்திற்குக் காசை ப் பயன்படுத்தலாம்
கரியாக்கும் பட்டாசுக்கேன் வீணாக்குவது, பாலகரே!

பிறக்கைபோதும் இறக்கும்போதும் வெடிகள் பலிவாங்குவது
சிறுவர் இறப்புக்கள், எப்போதும் வாடிக்கையாகி விட்டதே!
பட்டாசுப்பறைச் சத்தம் செவிப்பறையைச் செவிடாக்கும் சிட்டாய்ப் பறந்து வெடிப்பதுவும் வேண்டுமோ, பாலகரே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com