பட்டாசுச் சத்தம்: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

பட்டாசுச் சத்தம் பகர்வது 
என்னவெனில் 
விட்டது நரகாசுரன் தொல்லை இது 
வெளிப்படை  உண்மை! ஆனால்,
மண்ணில் நரகாசுரன்கள் 
மலிந்து விட்டார்களே;
வெள்ளையில் கொள்ளை 
வீழ்ந்தபாடில்லை:
கையூட்டு முக்காடைக்
களைந்த பாடில்லை;
பாயும் அன்பே காதலென
அறியாது,பேதைகள் 
ஆயுதம் எடுப்பது அசரவேயில்லை;
உண்பது நாழி,உடுப்பது 
இரண்டென்பதை உணரவேயில்லை;
உணரத் தலைப்பட்டால் 
பட்டாசுச் சத்தம் இன்னும் 
உச்சம்!
மாந்தர்க்குத் தேவையில்லை 
அச்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com