ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசு சத்தம்: பொன். குமார்

Updated On :1 நவம்பர் 2016, 10:54 am

பயிர் காக்க போராடும்
விவசாயிகளின் குரலைக் 
கேட்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.

உரிமைக்காக போராடும்
தொழிலாளர்களின் குரலை
ஒலிக்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.

மாநில முன்னேற்றத்திற்கு
மத்தியை நோக்கிய
தமிழர்களின் குரலைக்
காணாமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.

பசிக்காக ஏந்தி வாழும்
பிச்சைக் கார ர்களின் குரலை
அடக்கி விடுகிறது
பட்டாசு சத்தம்.

வெடித்தால் விபத்துண்டாகுமென
வேண்டுகோள் வைப்போரின் 
கோரிக்கைக் குரலை
கேளிக்கையாகி விட்டது
பட்டாசு சத்தம்.

பட்டாசு சத்தத்தில் 
காணாமல் போயின
பல குரல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.