/
பட்டாசு சத்தத்தில் பறக்க மறந்தன பறவைகள் ...கண்
திறக்காமல் பயந்து அழுதன சிறு குழந்தைகள் !
மறக்காமல் இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது
"பெரிய" மனிதர்கள் நாம் மட்டுமே ! ! ஆனால் ...வெடித்த
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும்
அந்த சிவகாசி சிறாரின் அவல நிலையை !...வான வேடிக்கை
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின்
இருண்ட வாழ்க்கையை ...! அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன் நிலம் பார்த்து சத்தம் போட்டு
அழும் அந்த உழவனின் மனக்குமுறலை மறைத்ததும்
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று சத்தமில்லாமல் தொலைந்து
மறைந்து போனதும் இந்த பட்டாசு சத்தம் போட்டு
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும் ஏற்றி புத்தாடையுடன் பலகாரமும் நலிந்தோர்
வீட்டுக் குழந்தைகளுடன் பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம்
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி
திருநாள் ஒருநாள் பூத்து மலர !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

