பட்டாசு  சத்தம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read

வெடிச்சத்தம்   காதுகளைத்   துளைப்ப   தன்றி
            வெடிகளாலே   வருகின்ற   பயன்தான்  என்ன
அடிப்பட்டால்   உடல்உறுப்பு   வலித்தல்   போன்றே
            அச்சத்தம்   காதுகளைத்   துடிக்கச்   செய்யும்
முடிகறுப்பாய்   புகைகக்கிச்   சுற்றுச்   சூழல்
            முழுவதையும்   நஞ்சாக்கி   மூச்ச   டைக்கும்
குடிஉயிரைக்   குடித்தல்போல்   வெடிநெ   ருப்போ
            குற்றுயிராய்   ஆக்கிவிடும்   கவன   மின்றேல் !

ஊர்மெச்ச   வெடிக்கின்ற   வெடிக   ளாலே
            உழைப்பாலே   வந்தபணம்   கரியாய்ப்   போகும்
ஊர்தெருக்கள்    வீடுகளின்   முன்பு   றத்தில்
            உடலுக்குள்   நோய்பரப்பும்   குப்பை   சேரும்
சீர்கல்வி   பெறும்வயதில்   தொழிற்சா  லைக்குச்
            சிறுவர்கள்   செல்கின்ற   அவலம்   ஓங்கும்
போர்க்களத்தின்    அழிவைப்போல்   செய்வ   தன்றிப்
            பொலிவுதரும்   உற்பத்தி   ஆக்க   மில்லை !

பட்டாசு   வாங்குதற்குச்   செலவு   செய்யும்
            பணந்தன்னை    ஏழையர்க்குக்   கொடுக்க   லாமே
பட்டாடை    இல்லையெனினும்   பருத்தி   ஆடை
            பாங்காக   வறியவர்க்கு   வழங்க   லாமே
பட்டினியில்   வாடுவோர்கே   உணவ   ளித்துப்
            பசியாற்றும்   இன்பத்திற்   கீடும்   உண்டோ
மட்டட்ற   மகிழ்ச்சிவர   அனைவர்  கூடி
            மண்வாசம்   கெட்டிடாமல்   விழாவெ   டுப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com