பட்டாசு சத்தம்: ஆப்ரகாம் வேளாங்கண்ணி 

Updated on
1 min read

பட்டாசு சத்தம் பிறரது 
தற்பெருமையின் பித்தம்
தொழிலாளரின் இரத்தம் 
வணிகர்களின் மொத்தம்
கதறி க்கதறியேக் கத்தும்
நடந்திட்டதின் அபத்தம்

நரகாசுரனை எரித்தோம்
அத்தீ நம்மினத்தை சுட்டதே
பட்டாசு கொளுத்துதற்கு
பதிலாக நாகரிகமாக நாம்
நமது தற்பெருமையினை
நமது ஆடம்பரமதனை
நமது கௌரவமதனை
நமது ஏட்டிக்கு போட்டியை
கொளுத்திப்பார்ப்பமே
பட்டாசு சத்தம் கட்டுப்பட

சீனத்துப் பட்டாசு படுத்து
விட்டது என்பதற்காகவோ
சிவகாசி பட்டாசு எழுந்து
நின்றது என்பதற்காகவோ
பொருக்க வொன்னாமலோ
சதித்திட்டம் தீட்டப்பட்டதோ அன்றி விதியின் விபரீதமோ
உயிர்களை மடித்திட்டதோ

கதறியே ஓலமிட்டு இதயம்
பதறிய காட்சிகள் யாவும்
நெஞ்சைப் பிளந்திட்டனவே
சுமையும் இல்லாமல் ஒரு
வலியும் இல்லாமல்  நாம்  நன்நாளில் அமைதியாக 
பட்டாசு சத்தம் கேட்போமே

காலங்காலமாக க்காசை
கரியாக்கும் கலாச்சாரம் 
விட்டொழியவிட்டு ஞாலம்
அமைதிபெற நம் பங்காக
தூலமாய் நிலைநிறத்தி புது
யுக்தியை வரைவோமே 
ஆன்மாக்கள் சாந்திபெற

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com