ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசுச்சத்தம்: மீனா தேவராஜன்

Updated On :1 நவம்பர் 2016, 10:44 am

தீபாவளிக்குத் தீபாவளி தெருவெங்கும்
தீயொளியுடன் வெடிக்கும் பட்டாசு எங்கும்
வெடிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் எங்கும்
பொட்டு வெடியும் பட்டதும் சத்தம் எழுப்பிடுமே!

பட்டாசு வைக்கும்போது பட்டென வெடிப்பது
சட்டென மனம் பரவசம் அளிப்பது
வெடித்துச் சிதறி விழுபுண் தோன்றுவது
வேண்டாத வேதனையல்லவா பாலகரே!

சுதந்திரமாய் வாழும் சிட்டுக்குருவிகளை
சுற்றுச்சூழலைக் காக்கும் சின்னப்பறவைகளை
புல்லினங்களை விருத்திக்கும் புள்ளினங்களை
வெடிச்சத்தம் மிரட்டி அடிக்குதே பாலகரே!

அச்சத்தால் பூமிவிட்டு அழிகின்றனவே
மிச்சம் இருப்பது எச்சங்கூட இல்லையே!
காரியத்திற்குக் காசை ப் பயன்படுத்தலாம்
கரியாக்கும் பட்டாசுக்கேன் வீணாக்குவது, பாலகரே!

பிறக்கைபோதும் இறக்கும்போதும் வெடிகள் பலிவாங்குவது
சிறுவர் இறப்புக்கள், எப்போதும் வாடிக்கையாகி விட்டதே!
பட்டாசுப்பறைச் சத்தம் செவிப்பறையைச் செவிடாக்கும் சிட்டாய்ப் பறந்து வெடிப்பதுவும் வேண்டுமோ, பாலகரே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.