பட்டதாரி:    பூ. சுப்ரமணியன்

Updated on
1 min read

அவன்
படித்த பட்டதாரிதான்
எந்தப் பண்ணையாரும்
வேலை கொடுக்க
முன்வரவில்லை !

சென்ற இடமெல்லாம்
வேலை காலியில்லை
போர்டு பேசாமலே
அவனை வாசலோடு
வழி அனுப்புகிறது !

அருகே சென்றாலும்
கடல் அலைகள் கூட
அவன் பாதங்களை
முத்தமிடாமலே
செல்லுகின்றன !

கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது - அவன்
மனமோ ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றன !

ஏங்கிய மனம்
தூங்கிய நினைவுகள்
கனவாக வந்து அவனை
பயமுறுத்துகின்றன !

அவன்
நாள்தோறும் படித்த
நாளேடுகள் எல்லாம்
பட்டதாரிகளுக்காக 
புலம்புகின்றன!

அவன்
பட்டதாரி ஆனவுடன்
வானில் பறந்தான்
கனவில் மிதந்தான் !

வேலையில்லாதவன்’
என்று அவன் 
தேய்ந்த செருப்பு கூட
ஏளனமாக சிரிக்கின்றன !

‘வெட்டி ஆபிசர்’ ‘தண்டச்சோறு’
படிக்காமலே அவனுக்கு
கிடைத்த பட்டங்களால்
படித்த பட்டமே
மறந்து விட்டது !

அரசாங்கத்திடமிருந்து
வாங்கிய பட்டத்திற்கு
வேலையில்லை !

உதவிப்பணம் கிடைத்தது
வேலையில்லா பட்டதாரி
சான்று அவனுக்கு
கிடைத்த பின்பு !                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com