பட்டதாரி: கவிஞர் இரா .இரவி

Updated on
1 min read

பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி 
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது !

தெருவுக்கு ஒரு பொறியாளர் இருந்தார் அன்று ஒரு
வீட்டில் பல பொறியாளர் உள்ளனர் இன்று !

வேலையில்லா பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு உள்ளனர் 
விவசாயம் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும் !

பட்டதாரி படித்த  படிப்பிற்கு வேலை இல்லை 
பட்டதாரி தேடும் வேலை கிடைப்பதில்லை !

கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை 
கிடைக்காத வேலையின் மீது ஏக்கம் உண்டு !

கல்வி  பெருகியது  என்பது முற்றிலும்  உண்மை 
பண்பு பெருகவில்லை என்பது கசப்பான உண்மை !

திருட்டு வழக்கில் பொறியாளர் கைது செய்தி படித்து 
திடுக்கிட்டோம் இதற்காகவா பயின்றான் என்று !

படித்தவன் மோசம் செய்தால் ஐயோ என்று போவான்
பாரதி பாடி வைத்தான் நல்ல பாடல் அன்று !

படிப்பறிவு இருக்கும் பலருக்கும்  இன்று 
பொது அறிவு பற்றாக்குறை இருக்கு !

நீதிபோதனை வகுப்புகள் பள்ளிகளில் 
நிறுத்தப்பட்ட காரணத்தால் மாணவர்கள் !

நீதி ,நேர்மை ,ஒழுக்கம்  ,மனிதநேயம்
நல்ல அறம் எதுவும் அறியவில்லை இன்று !

மது அருந்தி போதையோடு  பள்ளி சென்ற மாணவன்
மேலான ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் !

வரும் செய்திகள் யாவும் வேதனை தருகின்றன
வருங்காலங்களில் இக்கொடுமைகளை வேண்டாம் !

கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இனி 
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் !

பட்டதாரிகள் பெருகிப் பயனில்லை இன்று
பண்பாளர்கள் பெருகிட வழி வகை செய்யுங்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com